ஞாயிறு, 1 அக்டோபர், 2023

இன்னொரு கி . ரா .

 


கி . ரா . என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது கி ராஜநாராயணன் தான் . ஆனால் அவர் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னரே இன்னொரு கி. ரா. தமிழ் இலக்கிய உலகில் பிரபலமாக இருந்திருக்கிறார் . 

கி . ரா . என்ற பெயரில் எழுதிய கி . ராமச்சந்திரன் . முழுப்பெயர் A . K . ராமச்சந்திரன் . 1935 ல் பி . எஸ் ராமையா மணிக்கொடியின் ஆசிரியராக இருந்தபோது அதில் துணை ஆசிரியராக இருந்தவர் . பின்னர் 1939 ல் வெளிவந்த சூறாவளி இதழுக்கு க . நா . சு ஆசிரியர் ; கி . ரா . துணை ஆசிரியர் . மணிக்கொடி கால எழுத்தாளர்கள் அனைவரைப் பற்றியும் இணையத்தில் தகவல்கள் ஓரளவு கிடைக்கின்றன . ஆனால் அந்த கால கட்டத்தில் நிறைய எழுதிக் கொண்டிருந்த கி . ரா . குறித்து எதுவுமே இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது . 

மேலும் 1958 வாக்கில் ஜெமினி ஸ்டூடியோவின் கதை இலாக்காவில் இருந்துள்ளார் . [ உடன் பணி புரிந்தவர்கள் ந . பிச்சமூர்த்தி , அசோகமித்திரன். ஆகியோர் ] ஒளவையார் , வஞ்சிக்கோட்டை வாலிபன் முதலிய படங்களில் பங்களித்துள்ளார் . 

க . நா . சு , வல்லிக்கண்ணன் , ந . பிச்சமூர்த்தி , பி . எஸ் . ராமையா ஆகியோரின் நூல்களில் இவரைப்பற்றி அடிக்கடி குறிப்பிடப் பட்டிருந்தாலும் முழுமையான தகவல்கள் கண்ணில் படவேயில்லை . ஆர் பி . ராஜநாயகம் , கால சுப்ரமணியம் ஆகியோர் முகநூல் பதிவுகளில் இவர் குறித்து எழுதியுள்ளார்கள் . 

காரைச் சித்தர் என்ற சாமியாரின் தீவிர பக்தராகி இவரும் சாமியாராகி விட்டார் என்ற தகவல் எந்த அளவிற்கு உண்மையென்று தெரியவில்லை .

 


இந்தக் கி . ரா வின் ஒரு சிறுகதைத் தொகுப்பு – “ மாஜி மனைவி “ கலைமகள் காரியாலயம் வெளியீடு . இரண்டாம் பதிப்பு – ஏப்ரல் 1955 ; முதல் பதிப்பு – நவம்பர் 1944 . 

சுமார் 50 வருடங்களுக்கு முன் பூர்வீக வீட்டின் புத்தக அலமாரியில் இருந்து எடுத்துப் படித்த இந்தப் புத்தகத்தை மீண்டும் தேடி எடுத்து படிக்க வைத்தது இந்தக் கி . ரா . குறித்து R . P . ராஜநாயஹம் எழுதியிருந்த முகநூல் பதிவு ஒன்று . மணிக்கொடி , சூறாவளி , ராஷ்டிரவாணி , கலைமகள் ஆகிய இதழ்களில் வெளிவந்த 19 சிறுகதைகளின் தொகுப்பு . ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம் . விஷபாணம் கிட்டத்தட்ட ஒரு சயன்ஸ் ஃபிக்க்ஷன் வகை ; ஹாஸ்யப் பத்திரிகாசிரியன் அவலம் கலந்த நகைச்சுவை என்று பல்வேறு விதமான முயற்சிகள் . 

தமிழ் இலக்கிய உலகில் தூக்கிச் சுமக்க யாராவது இல்லாவிடில் எவ்வளவு பிரமாதமான படைப்பாளியும் காலப் போக்கில் காணாமல்தான் போய் விடுவார்கள் போலும் . 

இந்தத் தொகுப்பில் இல்லாத அவரது சிறுகதை ஒன்று கீழே ….

1945 ல் கலைமகள் இதழில் வெளிவந்தது .









 












 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக