கி . ரா . மணிவிழா
நினைவுகள் .
21 அக்டோபர் 1984
.
இடம் – மதுரை காலேஜ்
ஹவுஸ் மண்டபம் .
நிகழ்வு – எழுத்தாளர்
கி . ரா . மணிவிழா .
காலையில் கி . ராவின்
படைப்பிலக்கியம் குறித்த கருத்தரங்கம் . மாலையில் மணிவிழாக் கண்ட தம்பதியருக்குப் பாராட்டு
விழா . விழா ஒருங்கிணைப்பு – கவிஞர் மீரா .
கருத்தரங்கம் தலைமை
கோ . சங்கரராஜீலு . கருத்தரங்கில் பங்களித்தவர்கள் –
கோ . கேசவன் [ ’ கதவு ‘ இரண்டாம்
பதிப்பில் ‘ தோழர் ரங்கசாமி ‘ கதை நீக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்தார் ]
பேராசிரியர் தோதாத்ரி [ இயற்கையுடனான மனிதனின்
போராட்டம் என்பதே யதார்த்தம் . அது கி . ரா . கதைகளில் காணக் கிடைக்கிறது ]
பேராசிரியர் சி .
கனகசபாபதி [
கி . ராவின் படைப்புகளை உரலில் போட்டு இஸம் என்ற உலக்கையால் இடிக்க வேண்டாம் ]
அ . மார்க்ஸ் [ இன்னும் மனிதாபமுள்ள
எழுத்தாளராக , மக்களிடமிருந்து விலகிப் போகாதவராக இருப்பதாலேயே கி . ராவை உரிமையோடு
விமர்சிக்கிறேன் ]
கவிஞர் இந்திரன் [ கி . ரா . மனிதன்
எப்படியிருக்கிறானோ அப்படியே படைக்கிறார் ]
த . ராஜாராம் [ கி . ரா . எதையும்
கூவிச் சொல்வதில்லை ; பிரச்சாரம் செய்வதில்லை . அழுத்தமாகச் சொல்வார் ]
டாக்டர் தி . சு நடராஜன் [ கோபல்லகிராமம்
பல்வேறு வகை இலக்கிய உத்திகள் கொண்டது ]
கவிஞர் கெளரிஷங்கர் [ இது வயது விழா
இல்லை ; சாதனை விழா ] தலைவர் தன் முடிவுரையில் “ தத்துவச் சுமைகளை இளம் படைப்பாளிகள்
மீது வைக்காதீர் . கலைநுட்பத்தோடு எழுதப்படுவதைப் பாராட்டுங்கள் ” என்றார் .
பிற்பகல் 2 . 25 மணிக்கு
கி . ரா . நிதானமாக எழுந்து தாம் விமரிசனங்களால் அதிகம் பாதிக்கப்படாததைக் கூறி , சந்தோஷமாகவே
அனைத்தையும் பார்ப்பதாகச் சொல்லி அமர்ந்தார் .
இடையில் ஒரு சுவையான
நிகழ்ச்சி . “ உசிலம்பட்டி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவன் “ என்ற அறிமுகத்துடன்
திடீரென்று மேடையேறிய பெரியவர் ஒருவர் “ விவசாயிகள் பற்றி எழுதுகிற இந்த விவசாயிக்கு
விவசாயிகள் சார்பில் இதை அணிவிக்கிறேன் “ என்று
கூறிவிட்டு ஓர் அழகான ரோஜா மாலையை கி . ரா வுக்கு அணிவித்தார் . தம்பதியருள் ஒருவருக்கு
மட்டும் மாலையிட்டால் எப்படி …. அருகில் இருந்தவர்களின் சைகையைக் கணத்தில் புரிந்து
கொண்ட கி . ரா . தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி தம் துணைவியாருக்கு அணிவித்துவிட்டார்
.
மாலையில் கி . ரா
வுக்கு பாராட்டு விழா . தலைமை – கவிஞர் சிற்பி . கிராமியக் கலைஞர் குணசேகரன்
இசையுடன் விழா தொடக்கம் . சிற்பி தன் தலைமையுரையில் “ தகழி சிவசங்கரன் பிள்ளை , வைக்கம்
முகமது பஷீர் என்று ஊரோடு சேர்த்து வழங்குவது போல இடைசெவல் கி . ரா . என்று பாராட்ட
வேண்டும் “ என்றார் .
மணிவிழா வேண்டாம்
என்று முதலில் மறுத்த கி . ரா . தன் மணிவிழா நினைவாக தமிழுக்கு ஏதாவது செய்யவேண்டும்
என்று கூறி இளைய கரிசல் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளை அவரே தொகுத்து “ கரிசல் கதைகள்
“ என்ற பெயரில் அன்னம் வெளியீடாக விழாவில் வெளியிட வைத்தார் . முதல் பிரதியை வெளியிட
இருந்த அமைச்சர் காளிமுத்து வர இயலாது போனதால் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர்
வண்ணதாசன் . [ நான் தீரவாசத்துக்காரன் ; எனக்கு கரிசல் பருத்திக் காட்டில் என்ன
வேலை என்று நினைத்து விடாதீர்கள் . பருத்திக்காட்டில் ஒரு பட்டாம்பூச்சி மாதிரி என்று
வைத்துக் கொள்ளுங்கள் . கி . ரா . எனக்கு மாமா ] பிரதியை பெற்றுக் கொண்டவர் ந .
மணிமொழியன் . மணிமொழியன் பாராட்டுரையைத் தொடங்கி வைக்க தொடர்ந்து பாராட்டுரை வழங்கியவர்கள்
–
பழ . கருப்பையா [ திரும்பத் திரும்ப
படிக்கத் தூண்டுகிற கதைகளை எழுதியவர் கி . ரா ]
எஸ் . ஏ . பெருமாள் [ இலக்கியவாதிகள்
தீர்வு சொல்லிவிட்டால் என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை ? ]
ஆ .ரத்தினம் [ இடைசெவல்காரரின்
உள்ளம் சிவப்பு ]
தனுஷ்கோடி ராமமூர்த்தி [ நீண்ட காலம் முன்பு
இடைசெவலில் ஓர் ஆலமரத்தடியில் மிக எளிமையான தோற்றத்தில் பார்த்த ஆசான் கி . ரா . நிறமும்
மணமும் குணமும் மாறவேயில்லை ]
வீர . வேலுசாமி [ கி .ரா வைப் பின்பற்றும்
எந்த எழுத்தாளரும் சமூகப் பிரக்ஞையுள்ள நிலையில் இருந்து மாறவில்லை என்பதே அவரை எடை
போட உதவும் ]
தீப . நடராஜன் [ கி . ரா . அதிகமான
கடிதங்கள் எழுதியது எனக்குதான் ]
இரவு 9 மணிக்கு பேச
வந்த கவிஞர் கந்தர்வன் செறிவான உரை நிகழ்த்தினார் . [ ‘ பூவை ‘ கதையின் முடிவில்
“ கழுதை ஒருநாளாவது பூ வைத்தாத்தானே . எல்லோரும் சிரித்தார்கள் , எனக்கு சிரிப்பு வரவில்லை
“ என்ற கடைசி வரியில்தான் எழுத்தாளனின் ஆன்மா இருக்கிறது ] சிற்பியின் நிறைவுரை சுருக்கமாக
இருந்தது . [ கி . ரா . இயல்பான மனிதர் . நமது பாராட்டுகள் வெறும் ‘ ஜிகினா ‘ வேலைதான்
]
தம்பதிகளுக்கு சிறுமி
கண்மணி செல்மா மாலை அணிவித்தார் . விழாக் குழுவின் சார்பில் மணிவிழாப் பரிசாக
“ ரூ 2001 “ ஒரு பெட்டியில் வைத்து வழங்கப் பட்டது .
கி . ரா . ஏற்புரை
தொடங்கியபோது மணி இரவு 9-30 . [ மனம் திறந்து அனைவரும் பேசிய பேச்சு எனக்கு மகிழ்ச்சியைத்
தந்தது – ரசனையை அழித்துவிட்டு நாம் வாழ முடியாது . புரட்சியும் வேண்டும் ; ரசனையும்
வேண்டும் – யார் , யார் எழுதிய நூல்களையெல்லாமோ மொழி பெயர்க்கும் நிறுவனங்களின் பார்வையில்
என் நூல்கள் படவில்லையே ] ஏற்புரை சுருக்கமாக இருந்தாலும் நிறைவாகவே இருந்தது .
உபரித் தகவல் ஒன்று
– கி . ரா வின் நெற்றியில் அரக்குக் கலரில் அழகான குங்குமப் பொட்டு . அதென்ன அரக்குக்
கலர் ? திருமதி கி . ரா வின் பட்டுச் சேலையின் பார்டர் கலர் அரக்கு .
விஜயா பதிப்பகம் நெல்லை
வேலாயுதம் நன்றி
சொல்ல விழா இனிது நிறைவுற்றது .
தகவல்களும் படங்களும் – கவிஞர் மீராவின் “ அன்னம் விடுதூது “ நவம்பர் 1984 மாத இதழ் . [ கட்டுரையாசிரியர் – இராகுலதாசன் ]
கட்டுரையின் முழு வடிவம் கீழே ...





